ஒன்றிய துணைச்செயலாளராக வழக்கறிஞர் நியமனம்! - வாழ்த்துகள்!
ஆளும்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒன்றிய, பேரூர்கழக மட்டத்திலான உட்கட்சித்தல் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. அதன்படி மாவட்டக்கழகத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் பட்டியலை தலைமைக்கழகம் வெளியிட்டுவருகிறது. அதனடிப்பையில், கோவை மாவட்டம் ஆனைமலை வடக்கு ஒன்றிய துணைச்செயலாளராக வக்கம்பாளையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் A.திருநாவுக்கரசு M.A. B.L அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
A.திருநாவுக்கரசு M.A. B.L அவர்களை இப்பதவிக்கு பரிந்துரை செய்த ஆனைமலை வடக்கு ஒன்றியச் செயலாளர் கன்னிமுத்து, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்களுக்கும் மற்றும் மாவட்ட, ஒன்றியக்கழக நிர்வாகிகள் அனைவருக்கும் இராஜகம்பள நாயக்கர் சமுதாய மக்களின் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.