காரமடையில் இராஜகம்பள சமுதாய நலச்சங்க ஆலோசனைக்கூட்டம்!
கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் கடந்த 31.07.2022 கோவை ஈச்சனாரியில் தொடங்கி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆலோசனைக்கூட்டமும், நிர்வாகிகள் தேர்வும் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக கோவை வடக்கு மாவட்டம் காரமடை அருகேயுள்ள பெரிய தொட்டிபாளையத்தில் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் ஆலோசனைக்கூட்டம் வடக்கு மாவட்டச் செயலாளர் மனோகரன் அவர்களின் தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (14.08.2022) அன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஊர் பெரியவர்களும், திரளான இளைஞர்கள் மற்றும் பெண்களும் கலந்துகொண்டனர். இதில் பேசிய மாவட்டச் செயலாளர் மனோகரன் சங்கத்தின் நோக்கங்கள் மற்றும் தொடக்க விழாவில் பேசப்பட்ட விசயங்கள் குறித்து கூடியிருந்தவர்கள் மத்தியில் விளக்கிப்பேசினார். இதை ஏற்றுக்கொண்ட சமுதாய பெரியோர்கள் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தை வலுப்படுத்தவும், நிர்வாகிகளை தேர்வு செய்யவும் முடிவெடுத்துள்ளனர்.