🔴 LIVE | முப்பெரும் விழா 2023


தமிழ்நாடு பாடநூல்குழுவில் சாதி வெறியர்கள்! - கட்டபொம்மனாரின் தியாகத்தை இழிவுபடுத்தாதே!

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் 8-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தக்த்தில் மாவீரன் கட்டபொம்மனாரின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் வகையில் திட்டமிட்டே, பாடநூல் கழகத்தில் இருக்கும் சில சாதிவெறியர்கள் செயல்பட்டிருப்பதாகவும், மாண்புமிகு தமிழக முதல்வர் உடனடியாக இதில் தலையிட்டு அப்பகுதியை நீக்கிட வேண்டும் என்றும் சமுதாய தலைவர்கள் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதுகுறித்து த.வீ.க.பண்பாட்டுக்கழக கௌரவ ஆலோகர் நல்லாசிரியர் சங்கரவேலு, இராஜகம்பளம் (தொட்டியநாயக்கர்) மகா ஜனசங்கத்தின் மாநில தலைவர் மா.மாரையா ஆகியோர் தமிழக முதல்வருக்கு தனித்தனியாக எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தி உள்ளனர். இதன் விவரம் வருமாறு


வீரத்தின் விளைநிலமாக போற்றப்படும், பல்வேறு தலைவர்களாலும், ராணுவத்தாலும் மதிக்கப்படும் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் புகழை எத்துனை துரோகிகள் சேர்ந்து பொய்யுரைத்தாலும், மாவீரனின் தியாகம் காலத்தை வென்று நிலைத்திருக்கும் என்பதை உணர்ந்து, வருங்காலத்திலாவது இதுபோன்ற இழிவான செயல்களில் ஈடுபடவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved