TRB-க்கு எதிரான வழக்கு ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வுக்கு மாற்றம்.
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம் (TRB) மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவிலுள்ள சாதிகளை MBC (V), MBC/DNC, MBC என மூன்று வகையாக பிரித்து முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வானவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பிற்காக அழைப்பாணை அனுப்பியுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் எதிர்த்து தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபொழுது, இந்த வழக்கை ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வுக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கு விசாரணை செவ்வாய்க்கிழமை (6.09.2022) விசாரணைக்கு வரவுள்ளது.