🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலசங்கத்திற்கு வாழ்த்து!

கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலசங்கத்திற்கு வாழ்த்து!

இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் கோவையில் கடந்த ஜூலை 31-ஆம் தேதி தொடங்கிவைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பல கிராமங்களில் புதிய கிளைகள் தொடங்கப்பட்டு, நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். இதன் உட்சபட்ச வெளிப்பாடாக பெண்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள உற்சாகம் காரணமாக ஈச்சனாரியில் மகளிர் அணியும் தொடங்கப்பட்டு செயல்படத் தொடங்கியுள்ளது.

இதற்கிடையே நாளை நல்லட்டிபாளையம் அருகேயுள்ள மாசநாயக்கன்புதூரில் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் துவக்கவிழா நடைபெறுகிற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.டி.மோகன்ராஜ், இணை ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

இதன்மத்தியில், கோவை, மாச்சேகவுண்டன்பாளையம் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் குடும்பத்தைச் சேர்ந்த செல்வன்.இளமுருகன்-செல்வி.சத்தியபிரியா ஆகியோருக்கு நாளை மறுநாள் திருமணம் நடைபெற உள்ளது. இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கும் இணையருக்கும், புதிதாக அமையவுள்ள சமுதாய நலச்சங்க கிளைக்கும் வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.டி.மோகன்ராஜ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved