மண்டல் தலைவராக சி.அப்புசாமி நியமனம்! பணிசிறக்க வழ்த்துகள்!
ஈரோடு மாவட்டம், அந்தியூர் சட்டமன்ற தொகுதி, அந்தியூர் தெற்கு மண்டல் தலைவராக சி.அப்புசாமி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். மண்டல் தலைவராக பொறுப்பேற்றுள்ள சி.அப்புசாமி அவர்களுக்கு சமுதாய தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கம்பளத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த சி.அப்புசாமி அவர்களை மண்டல் தலைவர் பொறுப்பிற்கு பரிந்துரை செய்த மாவட்ட தலைவர் கே.ஆர்.கலைவாணி விஜயகுமார், மாவட்ட மத்திய அரசு நலத்திட்ட பிரிவு தலைவர் கே.விஜயகுமார் மற்றும் ஒன்றிய முன்னாள் தலைவர் ஆர்.சின்னசாமி ஆகியோருக்கும், ஒப்புதல் வழங்கிய மாநில தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் மற்றும் அமைப்புச் செயலாளர் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் கம்பளத்தாரின் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.