பாஞ்சை வேந்தருக்கு வீரவணக்கம் செலுத்தவருகிறார் வைகோ!
பாஞ்சை வேந்தன் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் 223-வது வீரவணக்க நாள் வருகின்ற 16-ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் மாவீரனுக்கு புகழஞ்சலி செலுத்த பல்வேறு அமைப்புகள் தீவிர ஏற்பாடு செய்து வருகின்றன.
தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகளில் மதிமுக பொதுச்செயலாளர் மட்டுமே தொடர்ந்து முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக கயத்தாறுக்கு நேரடியாக சென்று மாவீரன் தூக்கிலடப்பட்ட நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதை வழக்கமாக வைத்துள்ளார். அதன்படி இந்த ஆண்டும் வைகோ அவர்கள் கயத்தாறு வருவதை உறுதி செய்துள்ளன மதிமுக வட்டாரம்.
சென்னை வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் ஜனவரி 29-இல் முப்பெரும் விழா நடைபெறுவதையொட்டி அதற்கான பணிகள் மாவீரன் நினைவுநாளில் கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி ஏற்பாடுகள் தொடங்கப்படுவதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.