மாவீரனுக்கு வீரவணக்கம்- கோவையில் தயாராகும் படை
பாஞ்சை பெருவேந்தன் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் 223-வது நினைவுநாளான அக்டோபர் 16-இல் மிகுந்த எழுச்சியோடு வீரவணக்கம் செலுத்திட கோவை இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சார்பில் சிறப்பான முறையில் ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன.
இதுகுறித்து பேசிய கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.டி.மோகன்ராஜ், கடந்ந ஜூலை மாதம் இராஜகம்பள சமுதாயம் தொடங்கப்பட்ட பின் நடைபெறும் முதல் நிகழ்வாக அமைந்துள்ளாதால், கம்பளத்தாரின் தனித்துவத்தையும், அடையாளத்தையும் நிலைநிறுத்தும் வகையில் 223-வது நினைவுநாளை அனுசரிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் இருந்து கம்பளத்தார் சமுதாய மக்கள் பெருமளவில் கலந்துகொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.