கோவையில் சமுதாய நலச்சங்கத்தின் நிர்வாகிகள் தேர்வு!
கோவை வடக்கு மாவட்ட இராஜகம்பள சமுதாய நல சங்கத்தின் குளத்துப்பாளையம் கிளை துவக்க விழா ஊர் நாயக்கர் திரு ஜெயபால் அவர்கள் தலைமையில் நேற்று (16.10.2022) நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் ஈச்சனாரி எம். சிவகுமார் கலந்து கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை அறிமுகம் செய்துவைத்து வாழ்த்துரை வழங்கினார்.
குளத்துப்பாளையம் கிளையின் தலைவராக P.சரவணகுமார், துணைத்தலைவராக P.சுப்பிரமணி, செயலாளராக D.குமார், துணைச்செயலாளர்களாக R.கேசவன், M.பிரபாகரன், E.அருண்குமார், பொருளாளராக N.முத்து, செயற்குழு உறுப்பினர்களாக C.நாகேந்திரன், R.குமார், M.அஜித், C.முத்து, D.தட்சிணாமூர்த்தி, S.ரங்கநாதன், S.அருண் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு மாவட்ட கொள்கை பரப்புச்செயலாளர் ஆர்.ஏ.கணேசன், மாவட்ட பொருளாளர் ஆர்.கணேசன், மாவட்டத் துணைத்தலைவர் ஈச்சனாரி.கணேசன், மாவட்ட செய்தி தொடர்பாளர் மேட்டூர்.செந்தில்குமார், மாவட்டத் துணைச்செயலாளர். சண்முககுமா,ர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் அரவிந்த், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கமல் மாரிமுத்து, ஈச்சனாரி கிளை நிர்வாகிகள் மண்ணூர்.மகாலிங்கம், வெள்ளிங்கிரி ஆகியோர் வாழ்த்திப்பேசினார். இக்கூட்டத்தில் குளத்துப்பாளையம் கிராம இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.