கோவையில் முப்பெரும்விழா ஆலோசனை!
சென்னை வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் வருமா ஜனவரி மாதம் 29-ஆம் தேதி நடைபெறவுள்ள முப்பெரும்விழா ஆலோசனைக்கூட்டம் கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகேயுள்ள ஆர்.பொன்னாபுரம் கிராமத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட பொருளாளர் தர்மப்பிரகாஷ் தலைமை வகித்தார். பொன்னாபுரம் கே.பாபு வரவேற்புரை ஆற்றினார்.
கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.டி.மோகன்ராஜ் பேசுகையில், சமுதாய கட்டமைப்பை வலுப்படுத்திட கிளை நிர்வாகிகள் பணியாற்றிட வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்.
கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் அச்சிடப்பட்ட காலண்டரை வெளியிட்டு, பொன்னாபுரம் கிளை நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி பேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில்குமார் முப்பெரும்விழா நடத்துவதின் நோக்கம் மற்றும் தேவைகள் குறித்து எடுத்துரைத்தார்.