அறநிலையத்துறை அமைச்சருடன் சந்திப்பு!
வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் தலைமையில் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்களை சந்தித்து ஜனவரி 29-இல் சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ள முப்பெரும் விழாவில் கலந்து கொள்ள வேண்டி அழைப்பு விடுக்கப்பட்டது.
சங்கத்தின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு நிச்சயம் கலந்துகொள்வதாக தெரிவித்த அமைச்சருக்கு சால்வை மற்றும் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இந்த சந்திப்பின்போது சங்கத்தின் பொதுச்செயலாளர் மற்றும் ஆலோசகரும் இராஜகம்பள மகாஜன சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜெயராஜ் அவர்களின் மகன் வெங்கடேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.