🔴 LIVE | முப்பெரும் விழா 2023


எர்ற கொல்ல நாயக்கர் சங்க தலைவருடன் சந்திப்பு.

வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீரபாண்டிய கட்டபொம்மன் பேரவையின் நிறுவன தலைவர் P.V.இராதாகிருஷ்ணன் இல்ல மணவிழாவில் கலந்து கொள்வதற்காக விருதுநகர் வருகை புரிந்தார். 

திருமணவிழாவில் பங்கேற்ற இராமபட்டிணம் ஜமீன்தார் விஷ்ணு காந்த சக்திவேல், நாமக்கல் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி, வழக்கறிஞர் பழனிச்சாமி உள்ளிட்ட பல தலைவர்களை சந்தித்துப் பேசினார். 

இதன் தொடர்ச்சியாக விருதுநகர் கோட்டைபட்டி இந்து எர்றகொல்ல இராஜகம்பள (தொட்டியநாயக்கர்) நாயக்கர் பொதுநலச் சங்க அலுவலகத்தில் தலைவர் S.N.P.N.சதீஷ், துணைத்தலைவர் S.P S. இராதாகிருஸ்ணன்,   பொருளாளர் G.இராஜூ ஆகியோரை சந்தித்து ஜனவரி 29 இல் நடைபெறவுள்ள முப்பெரும்விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார். அப்போது கட்டபொம்மன் அறக்கட்டளை நிர்வாகிகள் வை.மலைராஜன், அ.காசிராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved