இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் கிளை துவக்கவிழா!
கோவை தெற்கு மாவட்டம் இராஜகம்பள சமுதாய நல சங்கத்தில் ஆனைமலை வட்டம் சின்னப்பம்பாளையம் கிளை துவக்க விழா 11.12.2022 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி அளவில் ஒடையகுளம் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் சின்னப்பம்பாளையம் R.B. பூபதி அவர்கள் தலைமையில் அவரது தோட்டத்தில் நடைபெறுகிறது. அது சமயம் கோவை ஒருங்கிணைந்த மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி சிறப்புரையாற்றுகின்றனர்.
மேலும் புதிய நிர்வாகிகளை வாழ்த்தி மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர், மாவட்ட மகளிர் அமைப்பாளர், மாவட்டத் தலைவர், மாவட்டச் செயலாளர் மாவட்டப் பொருளாளர், மாவட்ட இளைஞரணிச் செயலாளர், மாவட்டத் துணைத் தலைவர்கள், மாவட்ட துணைச் செயலாளர்கள், மாவட்ட மாணவரணி செயலாளர்கள், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர், மாவட்ட செய்தி தொடர்பாளர், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர்கள், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பேசுகின்றனர்.
சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சமுதாய பெரியோர்கள் கலந்துகொள்ளும் இந்தநிகச்சியை இளைஞர்கள், பெண்கள் மற்றறும் சமுதாய சொந்தங்கள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து தருமாறு கோவை தெற்கு மாவட்ட ராஜா கம்பள சமுதாய நலச் சங்கம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.