கலைவாணர் அரங்கில் இராஜகம்பளத்தாரின் ஆலோசனைக் கூட்டம்!
வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் ஜனவரி'29-இல் நடைபெறவுள்ள முப்பெரும்விழாவில் செய்ய வேண்டியப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்து, நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனங்களோடு கலைவாணர் அரங்கில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
சங்கத் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மூத்த தலைவர் ஆசிரியர் நல்லையா, பாடி புதுநகர் குருசாமி, ரவுண்ட் பில்டிங் முருகன், சிவராமன், ரமேஷ், கார்த்திகேயன், கோபால்சாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.