பண்பாட்டுக்கழக அறக்கட்டளை விழாவில் திருச்சி.சிவா சிறப்புரை!
தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகத்தின் சார்பில் மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் நிறுவப்பட்டுள்ள அறக்கட்டளை சார்பாக மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் 264-வது பிறந்தநாள் பெறுவிழா வரும் 2.01.2023 திங்கட்கிழமை காலை நடைபெறவுள்ளது.
பண்பாட்டுக்கழகத்தின் தலைவர்கள் முன்னிலையில் நடைபெறவுள்ள இவ்விழாவில் திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி.சிவா எம்.பி கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். இதற்கான அழைப்பிதழை நேற்று (30.12.2022) வெள்ளிக்கிழமை இரவு 10 மணி அளவில் நாமக்கல் நளா ஹோட்டலில் தங்கியிருந்த திருச்சி.சிவாவையும், மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் அவர்களையும் சந்தித்து தமிழ்நாடு வீரபாண்டியகட்டபொம்மன் பண்பாட்டுக்கழக பொதுச்செயலாளர் இராமகிருஷ்ணன், பொருளாளர் பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் வழங்கினர்.
இந்நிகழ்வில் நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகளும் உடனிருந்ததாக அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.