🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஆந்திர மாநில ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருடன் சந்திப்பு!

ஆந்திர மாநிலத்தில் ஆளும்கட்சியாக உள்ள ஓய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரும், BMR குழுமங்களின் தலைவருமான பீடா மஸ்தான் ராவ் அவர்களை இன்று (31.12.2022) காலை அவரது இல்லத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள் சந்தித்து பேசினர். இதுகுறித்து அச்சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் ஜனவரி 29-இல் தலைநகர் சென்னை கலைவாணர் அரங்கில் கொண்டாடப்படவுள்ள முப்பெரும்விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்து ஆந்திர மாநில மாநிலங்களவை உறுப்பினர் பீடா மஸ்தான் ராவ் அவர்களை நிர்வாகிகள் சந்தித்தனர். இருமல், காய்ச்சல் காரணமாக ஓய்வில் இருந்த மாநிலங்களவை உறுப்பினர், பட்ஜெட் கூட்டத்தொடருக்காக நாடாளுமன்றம் கூட்டம் தொடங்கும் வாய்ப்பு இருக்கும் நிலையில், நிச்சயமாக முப்பெரும்விழாவில்  கலந்துகொள்வதாக உறுதியளித்தார்.

மாநிலங்களவை உறுப்பினரை சந்திக்கும் நிகழ்வில் பொருளாளர் எஸ்.இராமராஜு, துணைத்தலைவர் ஆர். பெருமாள், துணைச்செயலாளர் ரவுண்ட் பில்டிங் முருகன், மண்டல பொறுப்பாளர் சிவராமன் ஆகியோர் பொதுச்செயலாளருடன் கலந்துகொண்டனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved