சென்னை மாநகர துணைமேயருடன் தலைவர் ஏஸ்.இராதாகிருஷ்ணன் சந்திப்பு!
சென்னை மாநகர துணைமேயர் சைதை மா.மகேஷ்குமார் அவர்களை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார். இதுகுறித்து அச்சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் ஜனவரி 29-இல் தலைநகர் சென்னை கலைவாணர் அரங்கில் கொண்டாடப்படவுள்ள முப்பெரும்விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்து சென்னை மாநகர துணைமேயர் சைதை,மா.மகேஷ்குமார் அவர்களை ரிப்பன் பில்டிங்கில் உள்ள அவரது அலுவலகத்தில் நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் சந்த்தித்து பேசினார்.
மாநகர துணைமேயரை சந்திக்கும் நிகழ்வில் பொதுச்செயலாளர், துணைச்செயலாளர் ரவுண்ட் பில்டிங் முருகன், மாப்பிள்ளை துரை ஆகியோர் தலைவருடன் கலந்துகொண்டனர்.