🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கரூர் தடியடியை கண்டித்து விடுதலைக்களம் ஆர்ப்பாட்டம் - சமுதாய நலச்சங்க கூட்டமைப்பு ஆதரவு

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் 264-வது பிறந்தநாள் விழா கடந்த 3-ஆம் தேதி தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கரூரில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது மேள தாளம் முழங்க தேவராட்ட நிகழ்ச்சியோடு ஊர்வலமாக செல்ல முயன்ற சமுதாய இளைஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதில் பலர் காயமடைந்தனர்.

காவல்துறையின் இந்த அத்துமீறலைக்கண்டித்து விடுதலைக்களம் கட்சியின் சார்பில் வரும் திங்கட்கிழமை (09.01.2023) மாவட்ட ஆட்சியர் முன்பு காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. விடுதலைக்களம் கட்சி சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு நாமக்கல் தொட்டிய நாயக்கர் சமுதாய நலச்சங்கம், இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதுகுறித்து கூட்டமைப்பின் தலைவர் மு.பழனிச்சாமி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கம்பளத்தார் சமுதாயத்தின் மீது நடத்தப்பட்ட தடியடியை கண்டிப்பதாகவும், விடுதலைக்களம் கட்சி நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் மக்கள் பெருமளவில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்ரும் கேட்டுக்கொண்டுள்ளனர். 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved