நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு வாழ்த்துச்செய்தி!
வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் தலைநகர் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ள முப்பெரும் விழாவிற்கு தமிழக நரர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு வாழ்த்துச்செய்தி அனுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் இந்திய விடுதலைப்போரில் தென்தமிழகத்தில் ஆதிக்க ஆங்கிலேயர்களை எதிர்த்து வீரப்போர் புரிந்து மடிந்தாலும், வரலாற்றில் மாபெரும் வீரராகவே புகழ்ப்படும் வீரபாண்டிய கட்டபொம்மனின் 264-வது பிறந்தநாளையொட்டி முப்பெரும்விழாவாக கொண்டாடும் லட்சக்கணக்கான கம்பளத்தாருக்கும், சமுதாய நலச்சங்கத்திற்கு வாழ்த்தும் தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரின் முழு வாழ்த்துச்செய்தி விழா மலரில் இடம்பெறும்.