🔴 LIVE | முப்பெரும் விழா 2023


விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் அவர்களுடன் சந்திப்பு!

வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் ஜனவரி'29-இல் தலைநகர் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் முப்பெரும் விழாவில் பங்கேற்கவுள்ள சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பிதழ் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. இப்பணியோடு மக்களாட்சியில் இராஜகம்பளத்தார் மலர் தயாரிப்பு பணிகளும் நடைபெற்று வருகின்றன.


இதுசம்மந்தமாக பல்வேறு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தலைமை விருந்தினர் மாண்புமிகு.கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன் அவர்களுக்கு அழைப்பு விடுக்க சென்றிருந்தபோது, புதூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் எம்.செல்வராஜ் அவர்களின் ஏற்பாட்டில் விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.மார்க்கண்டேயன் அவர்களைச் சந்தித்து முப்பெரும்விழா அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

இந்த சந்திப்பின்போது சங்கத் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன், மூத்த ஆலோசகர் ஆசிரியர் நல்லையா, வெங்கடேஷ் ஆகியோர் உடனிருந்தனர். 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved