இராஜகம்பளத்தாரின் முப்பெரும்விழா - இளம் தலைவர் துரை வைகோ வாழ்த்துச்செய்தி!
வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலசங்கம் சார்பில் ஜனவரி'29-ஆம் தேதி தலைநகர் சென்னையில் நடைபெறவுள்ள முப்பெரும்விழாவிற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழக செயலாளர் திருமிகு.துரைவைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திரு.துரைவைகோ அவர்கள் பொதுச்செயலாளருக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச்செய்தியில், நாட்டு விடுதலைக்காக போராடி, இன்னுயிர் ஈந்து, தியாக வரலாறு படைத்த மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் பெயரில் அகாடமி தொடங்கப்படுவதை முன்னிட்டு நடைபெறவுள்ள முப்பெரும்விழா வெற்றிபெற வாழ்த்துவதாகவும், இளைஞர்களுக்கு முறையான பயிற்சியளித்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற வைக்கும் கட்டபொம்மன் அகாடமியின் முயற்சியை பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், கட்டபொம்மன் அகாடமி மாணவர்களிடையே உரையாற்றும் வாய்ப்பிற்காக ஆர்வமுடன் காத்திருப்பதாகவும் வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.