ஆந்திர மாநில நாடாளுமன்ற உறுப்பினருக்கு அழைப்பிதழ்!
ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர் திரு.பீடா மஸ்தான் ராவ். தெலுங்குதேசம் கட்சியில் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தவர், ஆந்திராவில் ஜெகன்மோகன் தலைமையிலான அரசு பதவியேற்றுக்கொண்ட பின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
பிஎம்ஆர் என்ற பெயரில் பெரும் தொழில் நிறுவனத்தை நடத்தி வரும் திரு.பீடா மஸ்தான் ராவ் அவர்களை நேற்று மதியம் அவரது அலுவலகத்தில் சந்தித்து ஜனவரி'29-இல் நடைபெறவுள்ள முப்பெரும்விழாவிற்கான அழைப்பிதழை சங்கத்தின் பொதுச்செயலாளர் வழங்கினார். உடன் பொறியாளர் திரு.சரவணன் சென்றிருந்தார்.