🔴 LIVE | முப்பெரும் விழா 2023


வட்டார வளர்ச்சி அலுவலருக்கு குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் பாராட்டு!

சிவகங்கை மாவட்டம், ஊரக வளர்ச்சித் துறையில்  சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வரும் திரு.S.இலட்சுமணராஜூ அவர்களின் பணியினை பாராட்டி, இன்று (26.01.2023) காலை நடைபெற்ற குடியரசுதின விழாவில், மாவட்ட ஆட்சியாளர் திரு.P.மதுசூதன் ரெட்டி, IAS கேடயமும், பாராட்டு  சான்றிதழும் வழங்கினார்.

வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.S.இலட்சுமணராஜு அவர்கள், மத்திய, மாநில அரசின் பல்வேறு திட்டப்பணிகளை சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்தில் திறம்பட செயல்படுத்தியதற்காகவும், கோட்டைவேங்கைபட்டியில் புதிதாக கட்டப்பட்ட சமத்துவபுரம் திறப்புவிழாவிற்கு, தமிழக முதல்வர் வருகையின் போது சிறப்பான ஏற்பாடுகளை செய்தமைக்காகவும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாராட்டி கௌரவிக்கப்பட்டது. 

இன்று விருது வழங்கப்பட்ட திரு.S.இலட்சுமணராஜூ, விருதுநகர் மாவட்டம் பாலவனத்தம் கிராமத்தை சேர்ந்தவர். வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பொருளாளர் திரு.S.இராமராஜூ அவர்களின் உடன்பிறந்த சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. திரு.S.இலட்சுமணராஜூ அவர்களள் மேலும் பல பாராட்டுதலையும், மேலும் பல விருதுகளை பெற வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved