🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அமைச்சருடன் பேரூராட்சி மன்ற உறுப்பினர் சந்திப்பு!

கடந்த ஜனவரி-29 ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற முப்பெரும்விழாவில் கலந்து கொண்ட அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இதன் முழுவிபரம் பின்வருமாறு,

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக அங்கு முகாமிட்டுள்ள தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்களை திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பேரூராட்சி மாமன்ற உறுப்பினர் தனலட்சுமி ராஜேந்திரன் இன்று காலை ஈரோட்டிலுள்ள நட்சத்திர விடுதியில் சந்தித்து முப்பெரும்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தமைக்காக சால்வை அணிவித்து நன்றி தெரிவித்துக்கொண்டார். 


முன்னதாக நேற்றுகாலை திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் பாரப்பாளையம் துரைசாமி, தொழிலதிபர்கள் பூவேந்திரன், பொன்னுசாமி மற்றும் நாகேந்திரன் உள்ளிட்டோர் அமைச்சரை சந்தித்து சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர். 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved