நாடாளுமன்ற உறுப்பினர் Dr.கலாநிதி வீராசாமியுடன் நிர்வாகிகள் சந்திப்பு!
வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சார்பில் கடந்த ஜனவரி'29 ஆம் தேதி கலைவாணர் அரங்கில் முப்பெரும்விழா நடைபெற்றது. இதில் கௌரவ விருந்தினராக கலந்து கொள்வதற்கு வடசென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.கலாநிதி வீராசாமி ஒப்புதல் வழங்கியிருந்தார். இந்நிலையில் நாடாளுமன்றம் 31-ஆம் தேதி கூடுவதாக அறிவிப்பு வெளியாகியது. இதனையடுத்து பாராளுமன்ற நிலைக்குழுவின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டாக்டர்.கலாநிதி அவர்கள் டெல்லி செல்ல வேண்டியிருந்ததால் முப்பெரும்விழாவில் கலந்துகொள்ள இயலவில்லை.
இந்நிலையில், நேற்று வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள் சந்தித்து நினைவுப்பரிசு வழங்கினர். அப்போது கட்டபொம்மன் அகாடமியின் செயல்திட்டம், நிதியாதாரங்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும், வரும்காலங்களில் கட்டபொம்மன் அகாடமி மாணவர்களிடையே உரைநிகழ்த்தவும் சம்மதம் தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது பொதுச்செயலாளர் செந்தில்குமார் ராமராஜ் அவர்களோடு துணைச்செயலாளர் ரவுண்ட் பில்டிங் முருகன் உடனிருந்தார்.