கட்டபொம்மன் அகாடமி முகப்பு அலங்காரம் அமைக்கும் பணி தீவிரம்!
வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சார்பில் கட்டப்பட்டுள்ள மூன்றடுக்கு கட்டிடம் கட்டபொம்மன் அகாடமி என்ற பெயரில் இலவச பயிற்சி மையமாக செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, கடந்த ஜனவரி'29 ஆம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெற்ற முப்பெரும்விழா நிகழ்வில் கட்டபொம்மன் அகாடமி தமிழக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. முதற்கட்டமாக கட்டபொம்மன் அகாடமியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 11 பேர் இலவச பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், கட்டிடத்தின் முன்பகுதி அகாடமிக்குறிய வடிவமைப்பில் அமைக்க முடிவு செய்யப்பட்டு, கடந்த இருவாரங்களாக பணிகள் நடைபெற்று வருகின்றன. சுமார் பத்து லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் இப்பணிகள் இன்னும் ஒருசில வாரங்களில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.