குரூப் சர்வீஸ் பயிற்சி மையத்தில் நிர்வாகிகள் ஆய்வு!
வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் நிதியுதவியோடு, கட்டபொம்மன் அகாடமி மற்றும் மேத்தா ஐஏஎஸ் அகாடமி இணைந்து நடத்தும் குரூப் சர்வீஸ் தேர்வில், கம்பளத்தார் சமுதாய மாணவ-மாணவியர்கள் பதினோரு பேருக்கு இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த இருவாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த பயிற்சி வகுப்பில் நேரடி வகுப்பிலும், ஆன்லைன் வகுப்பிலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த இருவாரகால பயிற்சி வகுப்பின் நிறை குறைகளையும், மாணவர்களின் தேவைகளையும் பயிற்சி மைய நிர்வாகத்தோடு கலந்தாலோசிக்கவும், மாணவ-மாணவியரின் ஆர்வம், ஒத்துழைப்பு குறித்து தெரிந்துகொள்ளவும் சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் இன்று பயிற்சி வகுப்பில் நேரடியாக ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் தேர்வுக்குழு சார்பில் மத்திய பொதுப்பணித்துறை ஒய்வு பெற்ற இயக்குநர் பெ.இராமராஜ், வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பொருளாளர் எஸ்.இராமராஜ் மற்றும் மூத்த நிர்வாகிகள் செல்வராஜ், குருசாமி ஆகியோர் பங்கேற்றனர்.