திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளாக கம்பளத்தார்கள் அறிவிப்பு!
ஆளும்கட்சியான தி.மு.க வில் பல்வேறு மாவட்டங்களுக்கான தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், துணை ஒருங்கிணைப்பாளர்கள் அடங்கிய மூன்றாவது பட்டியலை கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, மாவட்டச் செயலாளர்கள் ஒப்புதலோடு வெளியிட்டுள்ளார் அக்கட்சியின் தகவல் தொழில் நுட்ப அணி மாநில செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பி.ராஜா அறிவித்துள்ளார்.
இப்பட்டியலின்படி ஈரோடு வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி இணை ஒருங்கிணைப்பாளராக த.பிரபு, எம்பிஏ, எம்.ஜெகநாதன் பிபிஏ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் என்.நல்லசிவம் அவர்களைச் சந்தித்து புதிய நிர்வாகிகள் வாழ்த்துப்பெற்றனர்.
தமிழகத்தில் மிக அதிக அளவில் இராஜகம்பளத்தார் வசிக்கும் மாவட்டங்களில் ஒன்றாகவும், பல தொகுதிகளில் வெற்றிவாய்ப்பை தீர்மானிக்கும் சக்தியாகவும் உள்ள கம்பளத்தார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு துணை அமைப்புகளில் பிரதிநித்துவம் வழங்கிய மாவட்ட நிர்வாகத்திற்கும், தலைமைக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.