🔴 LIVE | முப்பெரும் விழா 2023


நாளை வானில் தோன்றும் அதிசயம்! குழந்தைகளோடு காணத்தயாராவீர்!

நாளை வானில் நிகழப்போகும் அதிசயத்தை காண நீங்கள் தயாரா என்று கேட்கின்றனர் வானியல் விஞ்ஞானிகள்? அப்படி என்ன அதிசயம் நடக்க போகிறது என்று கேட்கிறீர்களா? 

செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, யுரேனஸ் ஆகிய 5 கிரகங்கள் நிலாவுக்கு அருகே ஒரே வரிசையில் தோன்றப் போகின்றன. நாளை (28.03.2023) செவ்வாய்க்கிழமை இந்த கிரக வரிசையைக் காண முடியும். இந்த அரிய நிகழ்வைக் காண விரும்புவோர் நாளை மாலை சூரியன் அஸ்தமனத்திற்கு பிறகு மேற்கு தொடுவானத்தை உற்று நோக்கி கவனிக்க வேண்டும் என்கிறார் நாசா விண்வெளி ஆய்வாளர்.

இரவு வானில், தொடுவானம் தொட்டு பாதி வானம் வரை இந்த ஐந்து கிரகங்கள் வரிசையாகக் காணப்படும் ஆனால் கொஞ்சம் தாமதித்தாலும் ஒரே நேரத்தில் ஐந்து கிரகங்களும் வரிசையாக காணப்படும்.ஆனால் கொஞ்சம் தாமதித்தாலும் ஒரே நேரத்தில் ஐந்து கிரக தரிசனம் தவறவிடும். ஆம், சூரியன் மறைந்த அரை மணி நேரத்தில் புதனும், வியாழனும் தொடுவானத்திற்குக் கீழே புதைந்துவிடும் என்கிறார் விஞ்ஞானி. வானம் தெளிவாக இருக்கும் நிலையில், மேற்புறத்தை நன்றாகக் காணமுடியும் சூழலில், உலகின் எந்த மூலையில் இருந்தும் 5 கிரக வரிசையைக் காணலாம்.

எல்லாம் சரி, வெறுங்கண்ணால் இந்த கிரகங்களை காணமுடியுமா என்பது உங்கள் கேள்வியா?

உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் முடியும். வியாழன், வெள்ளி, செவ்வாய் கிரகங்கள் பிரகாசமானவை என்பதால் அவற்றைக் காண்பது ஓர் அளவு எளிதுயி என்கிறார்கள் விண்வெளி ஆய்வாளர்கள். அதிலும் வெள்ளி மிகவும் பிரகாசமாக இருக்கும், செவ்வாய் கிரகம் நிலவுக்கு அருகில் சிவப்பாய் ஒளிரும். ஆனால் புதனும், யுரேனஸும் கொஞ்சம் டல் அடிக்க கூடியவை என்பதால், அவற்றை கண்டுபிடிப்பது தான் கொஞ்சம் சிரமம். பைனாகுலர் இருந்தால் வசதியாக இருக்கும்.

அதிலும் காணவே முடியாத யுரேனஸ் கிரகத்தை காண்பதற்காக அரிய வாய்ப்பாக இது இருக்கும். வெள்ளிக்கு மேலே அது பச்சையாக மிளிரும் என்கிறார் நாசா விஞ்ஞானி.

இதுபோல பல்வேறு கிரகங்கள், பல்வேறு எண்ணிக்கையில் வானில் தோன்றுவது அவ்வப்போது நடக்கும் நிகழ்வாகும். இதேபோல் கடந்த ஆண்டு சனி, வியாழன், செவ்வாய், வெள்ளி, புதன் ஆகிய கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved