🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கார்ப்பரேட் பாணியில் பிரமாண்டமாக நடைபெற்ற கம்பளத்தார் திருவிழா!

நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டம், பரளி கிராமம், நல்லையம்பட்டியில் எர்ரகொல்லவார் பிரிவிலுள்ள மாளவலு குலத்தாரின் குல தெய்வமான தங்கவேல்சுவாமி (பங்காரு பேள்ளாடு) ஸ்ரீ எர்ர நாகம்மாள் சுவாமி கோவில் திருவிழா நேற்று முன்தினம் (02.04.2023) தொடங்கி இன்று மாலை வரை நடைபெற்று முடிந்துள்ளது.

இந்தத் திருவிழா கார்ப்பரேட் பாணியில் மிகபிரமாண்டமாக நடத்தப்பட்டுள்ளதால் அனைத்து தரப்பினரின் கவனத்தையும் பெற்றுள்ளது. வழக்கமான கம்பளத்தாருக்கே உரிய பாரம்பரிய நிகழ்ச்சிகளோடு, டிஜிட்டல் திரை, பிரமாண்ட பேனர்கள், சிவப்பு கம்பள விரிப்பு, நியோன் மின்விளக்கு அலங்காரங்கள், வாழைமர தோரணங்கள் என திருவிழாவை அமர்க்களமான முறையில் திட்டமிட்டு நடத்தி முடித்துள்ளனர் விழாக்குழுவினர்.

இந்த விழாவில் தமிழகத்தின் பல பகுதிகளில் வாழும் கம்பளத்தார்களை விருந்தினர்களாக அழைத்திருந்தநர் மாளவலு குலத்தினர். மேலும் இவ்விழாவில் கலந்துகொள்வதற்காக பல்வேறு வெளிநாடுகளில் வாழும் மாளவலு குலத்தினர் தங்கள் கிராமத்திற்கு வந்திருந்து குலதெய்வத்தை வணங்கிச் சென்றனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved