கம்பளத்தார் விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் எலவனூர் கிராமத்தில், ஸ்ரீ வீரகொண்டவ நாயக்கர் சுவாமி, ஸ்ரீ மாட்டுக்கார சுவாமி, ஸ்ரீ வீரபொம்மக்காள் சுவாமி, ஸ்ரீ வீர ஜக்கம்மாள் சுவாமி, ஸ்ரீ வீர சின்னக்காள் சுவாமி எழுந்தருளியுள்ள திருக்கோவில் பெரிய மாலை திருவிழா இன்று நடைபெற்றது. இதில் தமிழக பாஜக மாநில தலைவர் கலந்துகொண்டார்.
இதுகுறித்து சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை அவர்கள், இருபது ஆண்டுகளுக்கு ஒரு முறை, இறை உத்தரவுக்குப் பிறகு நடந்தேறும் இந்த பெரிய மாலைத் திருவிழாவில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது பெரும் பாக்கியமெனக் கருதுகிறேன். அனைவரும், நல் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக வாழ இறைவனை வேண்டிக் கொண்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
கம்பளத்தாரின் பிரத்யோக விழா ஒன்றில் தேசியக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்றதில் கம்பளத்தாருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, முன்னதாக விழாவில் கலந்துகொள்ள வருகைதந்த அண்ணாமலைக்கு சமுதாய தலைவர்கள் சிறப்பான வரவேற்பளித்தனர்.