இலவச அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்த நகரமன்ற உறுப்பினருக்கு பாராட்டு!
விருதுநகர் நகராட்சி 31 வது வார்டு உறுப்பினர் ஆர்.எஸ்.சரவணன் ஏற்பாட்டில் கடந்த 27.06.2023 அன்று நடைபெற்றது. நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்ட இந்த முகாமில் தேவைப்படுவோருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும், மூக்குக்கண்ணாடி வழங்கவும் நகரமன்ற உறுப்பினர் சரவணன் முன்வந்தார்.
இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக முகாமில் கலந்துகொண்டு அறுவைசிகிச்சை செய்துகொண்ட 57 பேருக்கு நகரமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.கண்ணன் நேற்று முன்தினம் (09.07.2023) மூக்குக் கண்ணாடிகளை வழங்கினார். இதனால் மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள் நகர மன்ற உறுப்பினரை மகிழ்ச்சி பொங்க பாராட்டினர்.