மாவட்ட ஆட்சியரிடம் சீர்மரபினர் நலச்சங்கத்தினர் மனு!
தமிழகத்தில் புதிய அரசு பதவியேற்றுக்கொண்டபின் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். இதனால் பல்வேறு மாவட்டங்களில் ஆட்சியர்கள் புதிதாக பொறுப்பேற்று வருகின்றனர். டிஎன்டி சமுதாய மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே மாவட்ட ஆட்சியர்களுக்கு மனு அளித்திருந்தாலும், புதிய ஆட்சியர்களும் கோரிக்கைகளை தெரிந்துகொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற அடிப்படையில் தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்களிடம் சீர்மரபினர் நலச்சங்கத்தினர் மனு அளித்து வருகின்றனர். நேற்றுமுன்தினம் தேனி மாவட்ட ஆட்சியரை சந்தித்து தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மனு அளித்தனர்.