வழக்குகள் வாபஸ்! தமிழக முதல்வரின் முடிவுக்கு வரவேற்பு!
தமிழக சட்டமன்றத்தின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் இறுதிநாளான இன்று, விவாதத்திற்கு பதிலளித்த பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஸ்டெர்லைட் போராட்ட வழக்கு, 8-வழிச்சாலைக்கு எதிரான வழக்கு, மீத்தேன், நியூட்ரினோ திட்டத்திற்கு எதிரான போராட்டக்காரர்கள் மீதான வழக்குகள் வாபாஸ் பெறப்படும் என்று தெரிவித்தார். முதல்வரின் இந்த அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீர்மரபினர் நல உரிமைகளுக்காக 68 சமுதாயங்களுடன் இணைந்து கடந்த ஒருவருட காலமாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வரும் தொட்டிய நாயக்கர் சமுதாயம், போராட்டக்காரர்களின் நியாமான கோரிக்கைகளை உணர்கிறது. முதல்வரின் இந்த முடிவு ஜனநாயக உரிமைகளுக்காக போராடும் சக்திகளுக்கு நிம்மதியை அளிக்கிறது. தமிழக அரசின் இந்த முடிவை இராஜகம்பளத்தார் கூட்டமைப்பு வரவேற்கிறது.