🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மக்கள்நலப்பணியில் அர்ப்பணிப்புடன் தலைவர்!

கொரோனா பெருந்தொற்றுகாலத்திலிருந்து தொடர்ந்து பல்வேறு தடுப்புப்பணிகளையும், நிவாரண உதவிகளையும் மேற்கொண்டு வரும் புங்கம்பாடி மேல்பாகம் ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி.தமிழரசி தனக்கொடி அவர்கள், புங்கம்பாடி ஊராட்சிக்குட்பட்ட  பால்வார்பட்டி கிராமத்தில் தடுப்பூசி முகாமை தலைமைதாங்கி நடத்தி வைத்தார்.


புங்கம்பாடி மேல்பாகம் ஊராட்சியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தி, உயிரிழப்புகளை தடுத்திடும் வகையில் மக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு, அனைவரையும் தடுப்பூசி செலுத்துவதற்கு தயார் படுத்தி வந்தார். இதன் காரணமாக பொதுமக்களும், மாற்றுத்திறனாளிகளும் ஆர்வமுடன்  முகாமில் கலந்துகொண்டு  கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மருத்துவர்கள், கிராம செவிலியர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved