300 ஆண்டுகால கம்பளத்தாரின் வழிபாட்டு உரிமையை பறிப்பதா? - விடுதலைக்களம் ஆர்ப்பாட்டம்
ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், பெரியபுலியூர் ஊராட்சியில் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினர் 300 ஆண்டு காலமாக மாலா கோவில் (முன்னோர் நடுகல் வழிபாடு) வழிபாடு செய்துவரும் இடத்தை பறிக்க நினைக்கும் சக்திகளுக்கு துணைபோகும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து, விடுதலைக்களம் கட்சியின் சார்பில் 12.07.2021-திங்களன்று ஈரோடு இரயில் நிலையம் அருகில் நிறுவன தலைவர் திரு.கொ.நாகராஜன் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதில் வாய்ப்புள்ள மேற்கு மண்டல சமுதாய சொந்தங்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.