சங்கம் வளர்த்த மதுரையில் சமூகநீதி கூட்டமைப்பின் முதல் பத்திரிக்கையாளர் சந்திப்பு!
தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 68 DNT சமுதாயங்களை உள்ளடக்கிய 115 மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டுள்ள சமூகநீதிக்கூட்டமைப்பின் முதல் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று மதுரையில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் மிகவும் பிற்படுதப்பட்டோர் பட்டியலிலுள்ள மொத்தம் 116 சாதிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 20 விழுக்காடு இடஒதுக்கீட்டில் 10.50 விழுக்காடு இடங்களை ஒருசாதிக்குமட்டும் வழங்கி, பிற 115 சமுதாயங்களுக்கு 9.50 விழுக்காடு மட்டும் வங்கிய அநீதி குறித்தும், அந்த உள்ஒதுக்கீட்டிற்கு சொல்லப்பட்ட தவறான புள்ளிவிபரங்களை அம்பலப்படுத்தவும், தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசு அச்சட்டத்தை ஏன் நடைமுறைப்படுத்தக்கூடாது என்பதை விளக்கவும் இச்செய்தியாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.