🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சென்னையில் சமூகநீதி கூட்டமைப்பின் பத்திரிக்கையாளர் சந்திப்பு.

வன்னியர் 10.5 விழுக்காடு உள்ஒதுக்கீட்டிற்கு எதிராக தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 115 மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்கள் இணைந்து உருவாக்கியுள்ள சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் இரண்டாவது பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று காலை 11.00 மணியளவில் சென்னை, தியாகராய நகர், ஹபிபுல்லா சாலையில் உள்ள பசும்பொன் தேவர் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.  

இக்கூட்டத்திற்கு பிற்படுத்தப்பட்ட சமுதாய  அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளதோடு, முன்னாள் காவல்துறை அதிகாரி திரு.ரத்தினசபாபதி தலைமையில் பிரதிநிதிகளும் கலந்துகொள்கின்றன. இவர் தலைமையில் செயல்படும் SFBC அமைப்பின் சார்பில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தில் குறிப்பிட்ட ஒரு சமூகமே (வன்னியர்) தொடர்ந்து கோலேச்சுவதையும், மோசடிகளில் ஈடுபடுவதையும் எதிர்த்து விசாரணை நடத்தக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது  குறிப்பிடத்தக்கது. 

சென்னையில் நடைபெறும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவரும்,  சீர்மரபினர் நலச்சங்கத்தின் மாநில துணைத்தலைவருமான திரு.கொ.நாகராஜன்,  இராஜகம்பளத்தார் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளரும்,  சீர்மரபினர் நலச்சங்கத்தின் செயல்தலைவருமான திரு.பெ.இராமராஜ், வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பொருளாளரும்,  சீர்மரபினர் நலச்சங்கத்தின் இணைச்செயலாளருமான திரு.சு.இராமராஜ்,  வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின்  மண்டல ஒருங்கிணைப்பாளர் திரு.சுந்தர்ராஜ்  உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved