சென்னை பத்திரிக்கையாளர் சந்திப்பு முழுவெற்றி!
சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற சமூகநீதி கூட்டமைப்பின் பத்திரிக்கையாளர் சந்திப்பு திட்டமிட்டபடி வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் மூத்தபத்திரிக்கையாளர் திரு.அய்யநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவதற்காக நடைபெற்றுள்ள சதிச்செயல்களை செய்தியாளர்களிடம் பட்டியலிட்டனர்.
இக்கூட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட சமுதாய தலைவர்களும், ஐம்பதிற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர்.