அமரரானார் சங்கம் வளர்த்த தங்கம் திரு.S.ராமசாமி.
சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் மு.பொருளாளரும், லூகாஸ் டி.வி.எஸ் நிறுவன மு.ஊழியரும், விருதுநகர் மாவட்டம், பொட்டல்பட்டியைச் சேர்ந்தவருமான திரு.S.ராமசாமி(வயது-70) (இவரைப்பற்றி மேலும் விபரங்களுக்கு நீலநிற எழுத்தின் மீது விரல் வைக்கவும்) அவர்கள் இன்று மதியம் உடல்நலக்குறைவு காரணமாக மாணிக்கவாசகர் தெரு, குமரன் நகர், பாடி, சென்னை-யிலுள்ள அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார். அன்னாரது இறுதிசடங்கு நாளை காலை நடைபெறவுள்ளது.
சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் முதுகெலும்பாய் இருந்து, அல்லும் பகலும் சங்க வளர்ச்சிக்கு அயராது பாடுபட்ட திரு.S.இராமசாமி அவர்களின் இழப்பு சங்கத்திற்கும், சமுதாயத்திற்கும் பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர் மற்றும் நண்பர்களுக்கும், சமுதாயத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இவண்,
வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.