🔴 LIVE | முப்பெரும் விழா 2023


உள்ளாட்சியில் நல்லாட்சி நாயகி தமிழரசி தனக்கோடி!

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் புங்கம்பாடி மேல்பாகம் ஊராட்சி பெரிய வளையப்பட்டி  ஆரம்ப துணை சுகாதார நிலையத்தில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம், மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஆகியோர் துவக்கி வைத்தனர். இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.இளங்கோ, இரா.மாணிக்கம், சிவகாமசுந்தரி, மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றியக் கழக செயலாளர் ந.மணிகண்டன் அவர்களோடு இணைந்து, சமீபத்தில் முதல்வர் அறிவித்த இத்திட்டத்தை உடனடியாக தங்கள் ஊராட்சிக்கு தட்டிச்சென்றார் ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி.தமிழரசி தனக்கோடி

இத்திட்டத்தை புங்கம்பாடி மேல்பாகம் ஊராட்சியில் தொடங்கிடவும், மேலும் பல நலத்திட்டங்களை கொண்டுவரவும்,  பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றிடவும் ஊராட்சி மன்றத்தலைவர் தமிழரசி தனக்கோடிக்கு ஆதரவாக இருந்துவரும் ஒன்றிய பெருந்தலைவர் வள்ளியம்மாள் குருசாமி, அரவக்குறிச்சி மேற்கு ஒன்றியக் கழக செயலாளர் எம்.எஸ். மணியன் உள்ளிட்ட தலைவர்களுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved