நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களத்தில் மோதும் கம்பளதார்கள்!
தமிழகத்தில் வரும் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கம்பளத்தார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பல கட்சிகளில் இருந்தும் வேட்பாளராக போட்டியிடுகின்றனர்.
அந்தவகையில் கரூர் மாவட்டத்திலுள்ள அரவக்குறிச்சி பேரூராட்சி 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு திருமதி.ஜெயந்தி மணிகண்டன் போட்டியிடுகின்றார். இவர் அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய தி.மு.கழக செயலாளர் திரு.மணிகண்டன் அவர்களின் துணைவியார் ஆவார். இவர் ஏற்கனவே அரவக்குறிச்சி பேரூராட்சி தலைவராக பொறுப்பு வகித்து சிறப்பாக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 15-வது வார்டில் திரு.V.சின்னச்சாமி அவர்கள் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் சார்பில் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகின்றார். தூத்துக்குடி அமமுக-வில் முக்கிய பொறுப்பு வகிக்கும் திரு.சின்னச்சாமி அவர்கள் தங்கநகை மற்றும் தங்ககட்டிகள் விற்பனையில் ஈடுபட்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.