🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சக்கதேவிக்கு ஜோதி தொடர் ஓட்டம்! தலைவருக்கு நேரில் அழைப்பு!

வீ.க.ப.க.தலைவருடன் மாவீரன் ஊமைத்துரை தொண்டர் படை நிர்வாகிகள் சந்திப்பு வருகிற சித்திரை கடைசி வெள்ளியன்று நடைபெற உள்ளது. பாஞ்சாலங்குறிச்சி வீர சக்கதேவி ஆலய சித்திரை திருவிழாவை முன்னிட்டு, ஆதனூர் மாவீரன் ஊமைத்துரை தொண்டர் படை சார்பில், ஆதனூர் கட்டபொம்மன் நினைவுத் திடலில் இருந்து, பாஞ்சாலங்குறிச்சிக்கு 17-வது ஆண்டு "வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு ஜோதி தொடர் ஓட்டம் பேரணி" நடைபெறுகிறது.

இந்த நிலையில், ஆதனூர் மாவீரன் ஊமைத்துரை தொண்டர் படை சார்பில் நடைபெறும், "வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு ஜோதி தொடர் ஓட்டம் பேரணி" விழாவில் கலந்து கொள்ள, வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் தூத்துக்குடி மாவட்ட தலைவரும், தொழிலதிபருமான வலசை திரு.கண்ணன் அவர்களுக்கு, ஆதனூர் மாவீரன் ஊமைத்துரை தொண்டர் படை சார்பில் அழைப்பிதழ் வழங்கப்பட்டது.


இந்த சந்திப்பில் ஆதனூர் மாவீரன் ஊமைத்துரை தொண்டர் படை தலைவர் R.செல்வ மொட்டையசாமி செயலாளர் P.சரவணக்குமார் மற்றும் K.முத்துகுமார் S.நல்லதுரை B.இராஜ மொட்டையசாமி M. ‌ஸ்ரீராமகட்டபொம்முதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.


தகவல் உதவி

திரு.ஸ்ரீராமகட்டபொம்மதுரை

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved