திருப்பூர் மாவட்ட பிஜேபி துணைத் தலைவராக ரத்தினசாமி நியமனம்!
பாரதிய ஜனதா கட்சி திருப்பூர் வடக்கு மாவட்டம் விருந்தோம்பல் பிரிவு மாவட்ட துணைத் தலைவராக திருப்பூர் திரு.ஆர்.ரத்தினசாமி அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே பாரதிய ஜனதா கட்சியின் அமைப்புசாரா அணியின் மாநில செயற்குழு உறுப்பினர் பதவி வகித்து வருகிறார்.
சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் நன்கொடையாளரான திரு.ரத்தினசாமி அவர்களை இப்பொறுப்பிற்கு பரிந்துரை செய்த மாநிலத் தலைவர் திரு.அண்ணாமலை ஐ.பி.எஸ், மாநில அமைப்பு செயலாளர் திரு.கேசவன் விநாயகம், மாநில பொதுச் செயலாளர் திரு. முருகானந்தம், மாவட்ட பார்வையாளர் ஜி.கே.எஸ்.செல்வகுமார், மாநில விருந்தோம்பல் அணி தலைவர் திரு.ரத்மா சங்கர், திரு.கந்தவேல், திருப்பூர் வடக்கு மாவட்டத் தலைவர் திரு.செந்தில்வேல் கொங்கு நகர் மண்டல் தலைவர் திரு.செந்தில், விருந்தோம்பல் அணி மாவட்டத் தலைவர் திரு.மணிவேல் ஆகியோருக்கும், கட்சியின் முன்னனி நிர்வாகிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவண்,
வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.