இசைமாமேதைக்கு சட்டமன்ற உறுப்பினர், ஒன்றியச் செயலாளர் உள்ளிட்டோர் மரியாதை!
இசைமாமேதை நல்லப்பசுவாமிகளின் 134-வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, விளாத்திக்குளத்தில் நல்லப்பசுவாமிகளின் நினைவு ஸ்தூபியில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கு நேற்று (24.09.2022) நடைபெற்ற நிகழ்ச்சியி; விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V மார்கண்டேயன் அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் ஞானகுருசாமி, கோவில்பட்டி ஒன்றிய பெருந்தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் மற்றும் திமுக-வின் முன்னனி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
மேலும் இந்நிகழ்வில் வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழக மாநில துணைத்தலைவர் கோபால்சாமி, மாவட்ட தலைவர் கண்ணன், கொள்கை பரப்பு செயலாளர் ராமலிங்கம் எழுத்தாளர், எழுத்தாளர் சிவகுமார், நெல்லை மாரிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு நல்லப்பசுவாமிகளுக்கு மரியாதை செலுத்தினர்.
தகவல் உதவி: திரு.எம்,செல்வராஜ்,
புதூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர்.