🔴 LIVE | முப்பெரும் விழா 2023


திருமதி.கனிமொழி கருணாநிதி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து!

ஆளும்கட்சியான திராவிட முன்னேற்றக்கழகத்தின் 15-வது பொதுத்தேர்தலில் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புதூர் கிழக்கு ஒன்றியச் செயலாளராக எம்.செல்வராஜ் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக திமுக தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கான தேர்வும், பொதுக்குழு கூட்டமும் வரும் 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகவும், திமுக தலைவரிடம் வாழ்த்துப்பெறுவதற்காகவும், புதிய நிர்வாகிகளோடு திரு. செல்வராஜ் அவர்களும் சென்னையில் கடந்த இரு தினங்களாக முகாமிட்டுள்ளார்.


இதற்கிடையே ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி.கனிமொழி கருணாநிதி அவர்களை அவரது இல்லத்தில் சமூகநலத்துறை அமைச்சர் திருமதி.கீதாஜீவன் தலைமையில் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு.செல்வராஜ் உள்ளிட்டோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved