ஆபத்துக்கு கரம் கொடுத்த இராஜகம்பளத்து சமுதாய தலைவர்கள்
எந்த அதிகாரத்திலும் இல்லை என்றபொழுதிலும் பேரிடரில் உதவி சமுதாயத்திற்கு பெருமை சேர்த்த நமது சொந்தங்களுக்கு வாழ்த்துகள்.
அம்பத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மதிமுக சார்பில் வழங்கப்பட்ட நிவாரணப்பணிகளை முன்னின்று ஏற்பாடுகளை செய்து மக்களுக்கு நிவாரணப்பொருட்களை வழங்கினார் சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் முக்கிய நிர்வாகி திரு. ரவுண்ட் பில்டிங் முருகன்.
கொரோனா நோய் தாக்குதலால் வாழ்வாதரமின்றி சத்திஒன்றியம், நடுப்பாளையம் கிராமத்தில் உணவின்றி தவித்த ஆதரவற்ற ஏழை நாதஸ்வர கலைஞர்களின் 21குடும்பங்களுக்கு தன் சொந்த செலவில் அரிசி,பருப்பு,எண்ணெய், சக்கரை உள்ளிட்ட பொருட்களை வழங்கினார் சத்தியமங்கலம் திரு.பவுல்ராஜ் அவர்கள்.