“கோவிட்-19”- இறுதி சுற்றில் வெற்றி பெற்றவர்கள் விபரம்
அன்புடையீர்!
வணக்கம், கோவிட் -19 விடுமுறையில் இருக்கும் நம் சொந்தங்கள் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் வரலாறு பற்றி அறிந்து கொள்வதற்காக கோவிட்-19: “விடையைச் சொல்லுங்கள்-பரிசை அள்ளுங்கள்” என்ற தலைப்பில் மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்டது. அதில் மூன்றாவது/இறுதி சுற்றுக்காண கேள்விகள் கடந்த வாரம் கேட்கப்பட்டிருந்து.
மூன்றாவது சுற்றில் தலா 80.50 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றவர்கள்:
கோவில்பட்டியை சேர்ந்த அருண்ராமகிருஷ்ணன் மற்றும் தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியை சார்ந்த மல்ராஜ் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர் .
போட்டியில் கலந்துகொண்டு 50 மதிப்பெண்களுக்குமேல் பெற்றவர்களுடைய பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பரிசுத்தொகை பிரித்து வழங்கப்படுமென ஆலயகமிட்டி அறிவித்துள்ளது.
மூன்று சுற்றிலும் வெற்றி பெற்றவர்கள் பரிசுத்தொகையை நீங்கள் பதில் அனுப்பிய நம்பரில் போன் செய்து பெற்றுக் கொள்ளலாம்.
3ம் சுற்று கேள்விக்கான பதில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1.ஆதிகாலத்தில் மக்கள் வாழ்ந்த கண்டம் என்ன?, உலோகயுகத்தில் நம்மக்கள் வாழ்ந்த இடம் எது? உலகின் முதல் போர் ஒப்பந்தத்தை பதிவு செய்த பேரரசு எது?
ஆப்ரிக்கா,
மத்திய ஆசியா,
கெட்டிப் பேரரசு.
2. உலகின் முதல் ஒப்பந்ததில் தோக்கிலவா யாருடைய சகோதரர் என குறிப்பிடப்படுகிறது?, தோக்கிலவா மடலில் இடம் பெற்றுள்ள ஒருவர் பெயர் இன்றளவும் நம் மனதில் நிற்கிறது, அப்பெயர் என்ன?
அக்கையாவின் சகோதரர்.
பெரியம் மருது
3. மத்திய ஆசியாவிலிருந்து நம்முடன் பலரும் வந்தனர், அதில் நம்முடைய சகோதர இனமாக இன்றளவும் இருக்கிறவர்கள் யார்?
கம்மா, காப்பு, பலிஜா, கப்பராஜா, காப்பிலி.
4. சேர, சோழ, பாண்டியர்கள் எவ்வாறு தென்னகம் வந்தார்கள் என கனகசபை குறிப்பிடுவதாக, திருநெல்வேலி கெஷட்டிரியரில் ஒரு கருத்து உள்ளது. அதன் பக்கம் என்ன?
40
5.திருநெல்வேலி கெஷட்டியரில் 1755ல் நடைபெற்ற ஹெரான் படையெடுப்பு பற்றிய குறிப்பு எந்தெந்த பக்கத்தில் உள்ளது?
70, 71, 72, 376, 387, 513 & 518.
6.திருநெல்வேலி கெஷட்டியரில் 1783ல் நடைபெற்ற புல்லர்ட்டான் படையெடுப்பு பற்றிய குறிப்பு எந்தெந்த பக்கதில் உள்ளது?
77, 78, 279, 388, 416, 417 & 454.
7. திருநெல்வெலி கெஷட்டியரில் காடல்குடி பாளையம் பற்றிய குறிப்புகள் எந்தெந்த பக்கங்களில் உள்ளது?
79, 81, 82, 272, 273 & 276.
8.திருநெல்வேலி கெஷட்டியரில் குளத்தூர் பாளையம் பற்றிய குறிப்புகள் எந்தெந்த பக்கங்களில் உள்ளது?
79, 81, 82, 100, 272, 276, 385, & 386.
9. திருநெல்வெலி கெஷட்டியரில் பானர்மேன் பற்றிய குறிப்புகள் எந்தெந்த பக்கங்களில் உள்ளது?
81, 82, 376 & 389.
10.திருநெல்வேலி கெஷட்டியரில் ஊமைதுரை பற்றிய குறிப்புகள் எந்தெந்த பக்கங்களில் உள்ளது?
83, 85, 390 & 391.
11. திருநெல்வேலி கெஷட்டியரில் எட்டயபுரம் பற்றிய குறிப்புகள் எந்தெந்த பக்கங்களில் உள்ளது?
64, 71, 72, 73, 74, 80, 81, 82, 126, 149, 237, 243, 244, 245, 246, 250, 266, 267, 272, 273, 274, 276, 292, 339, 372, 373, 374, 375, 376, 377, 378, 379, 380, 388, 389, 390, 391, 392, 415, 418, 474 & 490.
12. திருநெல்வேலி கெஷட்டியரில் கம்மவார் பற்றிய குறிப்புகள் எந்தெந்த பக்கங்களில் உள்ளது?
88, 106, 114, 142, 143, 144, 158, 193, 214, 343 & 373.
13.திருநெல்வேலி கெஷட்டியரில் லெப்டினன்ட் கிளார்க் பற்றிய குறிப்புகள் எந்த பக்கங்களில் உள்ளது?
80.
14. நெல்சனின் மதுரை மேனுவலில் வடுகன் என்று யார் யாரை குறிப்பிடுகிறார்?
கம்மா, கவரா, ரெட்டி, தொட்டிய கம்பளத்தார்.
15. நெல்சனின் மதுரை மேனுவலில் கம்பளத்தாரின் சேவல் சண்டை மற்றும் வேட்டையாடுதல் ஆர்வம், அவர்களின் தார்மீகத்தை குறைத்ததாக எந்த பக்கத்தில் குறிப்பிடுகிறார்?
PART 2 – pg81.
16. நெல்சனின் மதுரை மேனுவலில் வடுகர்யெனப்படுபவர்களின் சாரசரி உயரம் மற்றும் சுற்றளவு பற்றி டாக்டர் ஜோசப் சொல்வதை எந்த பக்கத்தில் குறிப்பிடுகிறார்?
PART 2 – pg84.
17. நெல்சனின் மதுரை மேனுவலில் திருமலை நாயக்கர் பற்றிய குறிப்புகள் எந்தபக்கத்திலிருந்து எந்தபக்கம் வரை உள்ளது?
PART 3 – 121 TO 176.
18. நெல்சனின் மதுரை மேனுவலில் திருமலை நாயக்கரை எதிர்த்த எட்டயபுர பாளையக்காரரை கொன்றது பற்றிய குறிப்புகள் எந்தபக்கத்தில் உள்ளது?
PART 3 – 138.
19.நெல்சனின் மதுரை மேனுவலில் மைசுரை எதிர்த்து திருமலை நாயக்கர் நடத்திய மூக்கறுப்பு போர் பற்றிய குறிப்புகள் எந்தபக்கத்தில் உள்ளது?
PART 3 –138 & 139 .
20. நெல்சனின் மதுரை மேனுவலில் சந்தாசாகிப், ராணி மீனாட்சியை நம்பவைத்து மதுரையை கைப்பற்றியது பற்றிய குறிப்புகள் எந்தபக்கத்தில் உள்ளது?
PART 3 – 257 TO 264.
21. ஜெனரல் வெல்ஸின் ராணுவ நினைவுகள் எனும் புத்தகத்தில் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையின் நீள, அகலம் எவ்வளவென்று குறிப்பிடுகிறார்?
500*300
22.ஜெனரல் வெல்ஸின் ராணுவ நினைவுகள் எனும் புத்தகத்தில் சங்கரங்கோவிலிலிருந்து கிளம்பிய வெள்ளையர் படை குலசேகரநல்லூரை என்று வந்தடைந்ததாக குறிப்பிடுகிறார்? பாஞ்சை படையில் எத்தனை வீரர்கள் வந்ததாக குறிப்பிடுகிறார்?
பிப்ரவரி 8.
1000 / 1200.
23. ஜெனரல் வெல்ஸின் ராணுவ நினைவுகள் எனும் புத்தகத்தில் காடல்குடிப் போரில் இறந்தவர்களின் எண்ணிக்கை என்னவென்று குறிப்பிடுகிறார்?
வெள்ளையர்களின் தரப்பில் 3பேர் கொல்லப்பட்டனர். 18பேர் குற்றுயிராக தரையில் கிடந்தனர். எதிரியின் தரப்பில் எற்பட்ட இழப்பு கண்டறியப்படவில்லை எங்கிறார்.
24. ஜெனரல் வெல்ஸின் ராணுவ நினைவுகள் எனும் புத்தகத்தில் பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் மற்ற எல்லாப் பாளையக்களிலும் உறுதியும், அஞ்சா நெஞ்சமும் வாய்ந்தவர் என்று எந்தப் பக்கத்தில் குறிப்பிடுகிறார்?
பக்கம் 57
25. ஜெனரல் வெல்ஸின் ராணுவ நினைவுகள் எனும் புத்தகத்தில் ஊமைதுரையை எதிர்த்து வெள்ளையருக்கு எட்டயபுர பாளையக்காரர் செய்த உதவியை எந்தெந்த பக்கத்தில் குறிப்பிடுகிறார்?
பக்கம் 68, 79, 101, 118, 122, 132 & 133
26. ஜெனரல் வெல்ஸின் ராணுவ நினைவுகள் எனும் புத்தகத்தில் பாஞ்சாலங்குறிச்சி வரைபடத்தை எந்தெந்த பக்கத்திற்க்கு இடையில் குறிப்பிடுகிறார்?
பக்கம் 68ற்கும் 69ற்கும் நடுவில்.
27.ஜெனரல் வெல்ஸின் ராணுவ நினைவுகள் எனும் புத்தகத்தில் பாஞ்சாலங்குறிச்சி போரில் லெப்டினன்ட் கில்கிரிஷ்ட் எப்பொது கொல்லப்பட்டதாக குறிப்பிடுகிறார்?
24-05-1801
28. ஜெனரல் வெல்ஸின் ராணுவ நினைவுகள் எனும் புத்தகத்தில் ஊமைதுரையின் தன்னலம் கருதாத தூய்மையான தேசபக்தியென்று எந்தபக்கத்தில் குறிப்பிடுகிறார்?
பக்கம் 131.
29. கட்டபொம்மனாருக்கு புகழாரம் சூட்டிய கேரள முதல்வர் யார்?
EMS. நம்பூதிரிபாட்
30. கட்டபொம்மனை தூக்கிலிட்ட பானர்மேன் எவ்வாறு இறந்தான்? அவனது கல்லறை எந்த நாட்டில், எந்த சர்ச்சில் உள்ளது?
மலேசியா / பிணாங் / பிரின்ஸ் ஆப் வேல்ஸ்ற்கு நாடு கடத்தப்பட்ட நமது முன்னோர்களால் தாக்கப்பட்டு படுத்தபடுக்கையாய் இருந்த பானர்மேன், பின்னர் காலராவால் மரணமடைந்தான்.
மலேசியா / பிணாங்கிலுள்ள செயின் ஜார்ஜ் சர்ச்க்கு அருகிலுள்ள புரோட்டஸ்டண்ட் கல்லறை தொட்டத்தில் அவனது கல்லறை உள்ளது.
31. இந்திய வரலாற்றில் முதன்முதலில் நான்கு வெள்ளையரை தூக்கிலிட்டவர் யார்?
ஊமைத்துரை & சிவத்தையா.
32. இங்கிலாந்து இளவரசர் எட்வர்டுக்கு, சிவகங்கை ராணி பரிசளித்த சுருள்வாள் யாருடையது? எந்த நாட்டில், எந்த அருங்காட்சியகத்தில் உள்ளது?
கட்டபொம்மன் / ஊமைதுரை.
இங்கிலாந்து.
இளவரசருக்கு சொந்தமான சண்டரிங்க்காம்பேலஸ்சில் RCT அருங்காட்சியகத்தில் உள்ளது.
33. பானர்மேனுக்கு உயர் அதிகாரியாகயிருந்து பாஞ்சாலங்குறிச்சி போரை வழிநடத்திய ஆதர்வெல்லெஸ்லி பிற்காலத்தில் இங்கிலாந்தில் வகித்த உயர்பதவி என்ன? அவர் போரிட்டு வென்றவர்களில் முக்கியமானவர்கள் யார்? பாஞ்சாலங்குறிச்சி போரை பற்றி அவரது கடிதப் போக்குவரத்தை விளக்கவும்…
இங்கிலாந்தின் பிரதமர்.
நெப்போலியன், திப்புசுல்தான்.
பாஞ்சாலங்குறிச்சி போர் அச்சமுட்டக்குடிய, பயங்கரமான, கோரமான போராகும்.
சுருக்கமாக கூறினால் பாஞ்சாலங்குறிச்சி போரில் ஆங்கிலேயர்களுக்கு ஏற்ப்பட்ட இழப்பை பற்றி அவரது கடிதங்கள் விளக்குகிறது.
34. கட்டபொம்மனாரின் வரலாறு படித்து, இரட்டைவாள் போன்று இரட்டை துப்பாக்கியை தனது இயக்க கொடியாக அமைத்த போராளி யார்? வெல்ஸ்ன் புத்தகத்தை விரும்பிப் படித்த மாபெரும் போராளி யார்?
மேதகு பிரபாகரன்.
சேகுவாரா.
குறிப்பு: போட்டியில் கலந்துகொண்ட அனைவரும் கொடைக்கானல் வரலாற்று கருத்தரங்குக்கு அழைத்துச் செல்லப்படுவர்.
போட்டியில் பங்குபெற்ற அனைவரையும் பாராட்டுகிறோம்.
இப்படிக்கு,
அருள் மிகு வீரசக்கதேவி ஆலயக்குழு பாஞ்சாலங்குறிச்சி