இராஜகம்பளத்தாருக்கு மா.செ. பதவி வழங்குக – டாக்டர்.சி.எம்.கே.ரெட்டி கோரிக்கை
அஇஅதிமுக வில் காலியாக உள்ள விருதுநகர் மாவட்டச் செயலாளர் பதவிக்கு, அந்த மாவட்டத்தில் அதிகமாக வசிக்கும் இராஜகம்பளத்தார் சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு வழங்கக்கோரி, தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோருக்கு அகில இந்திய தெலுங்கு சம்மேளனத்தின் (AITF) தலைவர் பேராசிரியர். Dr.CMK.ரெட்டி அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.
இராஜகம்பளத்தார் சமுதாயத்தினரின் அரசியல் வளர்ச்சிக்காக குரல் கொடுக்கும் திரு. Dr.CMK.ரெட்டி அவர்களுக்கும், அகில இந்திய தெலுங்கு சம்மேளனத்திற்கும் இராஜகம்பளத்தார் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.