நீட் தேர்வில் முதலிடம் பெற்ற மருத்துவர்.திரு.சிவா அழகிரிசாமிக்கு வாழ்த்துகள்
நமது இராஜகம்பள சமுதாயத்தை சேர்ந்த மாணவரும், தேனி மாவட்டம் - தேவதானப்பட்டி அருகேயுள்ள அட்டணம்பட்டி திரு.அழகிரிசாமி-தெய்வத்திருமதி.ஜெயந்தி அவர்களின் இளைய மகன், மருத்துவர் டாக்டர்.சிவா அழகிரிசாமி, M.B.B.S., அவர்கள் அகில இந்திய அளவில் நடைபெற்ற முதுநிலை பட்ட படிப்பிற்கான தேர்வில், (NEET PG Result 2020) மாநில அளவில், பொது பிரிவில், இரண்டாம் இடத்தையும், MBC பிரிவில் முதலாம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார்.அவருக்கு சமுதாயத்தின் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
தற்போது டாக்டர்.சிவா அழகிரிசாமி, M.B.B.S., அவர்கள், கமுதி அருகில் உள்ள, பேரையூரில், ஆரம்ப சுகாதார நிலையத்தில், சிறப்பு குழந்தைகள் நல மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். டாக்டர்.சிவா அழகிரிசாமி, M.B.B.S., அவர்கள், தரவரிசைப்பட்டியலில் முதலிடம் பெற்றதின் மூலம், Radiology பட்ட மேற்படிப்பை, சென்னை MMC கல்லூரில் படிக்கவேண்டும் என்ற கனவை நனவாக்கியுள்ளார். வருங்காலத்தில் மருத்துவத்துறையில் ஆற்றப்போகும் சேவை சமுதாயத்திற்கு பெருமை சேர்த்திடும் வகையில் அமைய வாழ்த்துகிறோம்.